அரச தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்; சாதனைப் பயணம் தொடரட்டும்: மோடிக்கு அன்புமணி வாழ்த்து

இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி இந்த சாதனைப் பயணம் 2001-ஆம் ஆண்டு புஜ் நில நடுக்கத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றதில் தொடங்கியது.

அதன்பின், இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாட்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அப்பதவியில் நீடிக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.”

Facebook Comments Box