உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞரின் ஸ்கூட்டர் மீது என் வாகனம் மோதவில்லை: திருமாவளவன் விளக்கம்

சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடந்த தகராறு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் நேற்று-முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பும் போது, அவர் சென்ற கார் அருகே செல்கிறார் போல, அந்த வழியாக சென்று கொண்டிருந்த வழக்கறிஞரின் ஸ்கூட்டர் மீது கார் மோதியது போலத் தோன்றியது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், தனது வாகனத்தை நிறுத்தி, “ஏன் காரை அஜாக்கிரதையாக ஓட்டுகிறீர்கள்?” எனக் கண்டித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருமாவளவன் முகநூல் நேரலையில் கூறியது:

“வழக்கறிஞர் என் வாகனத்தின் முன்னிலையில் தனது வண்டியை நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கைகளை ஓங்கியவாறு வந்தார். அவரை எதிர்த்து பேசும் போது, கட்சியினர் தாக்க முயன்றனர். காவல் துறையினர் அவரை பார்கவுன்சில் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுவே நடந்தது. என் வாகனம் அவரது வண்டி மீது மோதவில்லை. ஆனால் சிலர் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். அண்ணாமலை போன்றவர்கள் இதற்கு வக்காலத்து வாங்கி எதிர்மறை கருத்துகளை பரப்புகின்றனர். விபத்து என்ற வகையில் எதுவும் நிகழவில்லை. இதை பெரிதுபடுத்தி தலைமை நீதிபதி மீது தாக்க முயற்சியை திசை திருப்ப முயல்கின்றனர். ஆனால் இதற்காக வழக்கறிஞர் மற்றும் அமைப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box