இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க காவல்துறைக்கு உத்தரவிட வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை…. அண்ணாமலை

0

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நெடுந்தீவு அருகே நேற்று 359 மீன்பிடி படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​இலங்கை கடற்படையினரின் படகு மீன்பிடிக்கப்பலின் மீது மோதியதாக குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது படகில் இருந்த 4 மீனவர்களில் ஒரு மீனவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாகவும், ஒரு மீனவர் காணாமல் போனதாகவும், இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், சமீபத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். காணாமல் போன தமிழக மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிட்டதுடன்,

கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here