WhatsApp Channel
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 6வது நாளாக போர் நடந்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. 5,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி, ஹமாஸ் ஆயுதங்களுடன் இஸ்ரேலை தாக்கி ஊடுருவி, கண்ணில் பட்ட அனைவரையும் கொன்று குவித்தது.
அன்றிலிருந்து, ஹமாஸ் மீது அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவித்த இஸ்ரேலிய அரசு, காஸா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி இன்று 6வது நாளை இரு தரப்பினருக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கிட்டத்தட்ட 3,600 பேர் கொல்லப்பட்டனர். யுத்தம் காரணமாக காஸா பகுதியில் இருந்து மட்டும் சுமார் 3,38,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் சுரங்கப்பாதை கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்குத் தெரியாமல் ஆயுதங்களைக் கொண்டு செல்ல ஹமாஸ் இந்த சுரங்கங்களைப் பயன்படுத்தியது. இதன் விளைவாக, சுரங்கப்பாதைகளை தகர்த்து ஹமாஸை பலவீனப்படுத்தும் உத்தியுடன் இஸ்ரேல் இப்போது ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள அமெரிக்கர்கள் தங்கள் பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து, காசா நகருக்குப் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலும் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. ஹமாஸை பூமியின் முகத்தில் இருந்து துடைத்தெறிய உறுதிமொழி எடுத்துள்ளது.
Discussion about this post