WhatsApp Channel
6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஆனந்த் விஹார் முனையத்தில் இருந்து அசாம் மாநிலம் காமக்யா நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் (12506) 6 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 9.35 மணியளவில் தடம் புரண்டன.
இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்தனர். மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நிவாரண வாகனம் மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 6 பெட்டிகள் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக 15 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 5 பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த வங்கி திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, விபத்து குறித்து தகவல் பெற ரயில்வே உதவி எண்களை அறிவித்தது.
அதன்படி
PNBE ஹெல்ப்லைன்:- 97714 49971
டிஎன்ஆர் உதவி எண்:- 89056 97493
COMM CNL:- 77590 70004
ARA உதவி எண்:- 83061 82542
எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Discussion about this post