WhatsApp Channel
இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாட்களாக காசாவில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் இன்று 26வது நாளை எட்டியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே நடந்த முந்தைய 4 போர்களை விட இந்த போரில் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, மனிதாபிமான அடிப்படையில் காசா போரை நிறுத்துமாறு ஐ.நா. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இஸ்ரேல் அதை திட்டவட்டமாக நிராகரித்து, ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை ஓயப்போவதில்லை என்று சபதம் செய்து போரை தொடர்ந்தது. ஆரம்பத்தில் வான் மற்றும் கடல் மார்க்கமாக காஸா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவம், கடந்த சில நாட்களாக காஸாவில் தரைவழியாக தனது தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.
வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இஸ்ரேல் விமானப்படையின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பும் சேதமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அங்கு இஸ்ரேல் ராணுவத்தை ஹமாஸ் அமைப்பினர் எதிர்கொள்வதாகவும், தெருக்களில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய இராணுவத்தின் இடைவிடாத குண்டுவீச்சு காரணமாக குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே தரைமட்டமாகிவிட்டன, மேலும் தரைவழி தாக்குதல் அங்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.
தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் வடக்கு காசா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் ஷெல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
அக்.,7ல் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராகிம் பியாரி வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அந்த அமைப்பைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், அமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
காஸா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் சிக்கலை எதிர்கொள்வதாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விமானப்படை தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 150 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை மறைக்க இஸ்ரேல் பொய்யான செய்திகளை பரப்புவதாக அதன் உறுப்பினர்கள் யாரும் முகாமில் தங்கவில்லை.
Discussion about this post