WhatsApp Channel
எதிரி நாடுகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் வலியுறுத்தினார்.
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. எனவே நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்புமாறு வடகொரியாவிடம் ஐ.நா. தடை செய்யப்பட்டது. ஆனால் வடகொரியா அதை புறக்கணித்து கடந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
எனவே வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டு போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. இதனையடுத்து தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடமாட்டத்தை கண்காணிக்க உளவு செயற்கைகோள்களை வடகொரியா அனுப்பியது. இதற்கு ஐநா மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் 2024ல் மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post