WhatsApp Channel
திருப்பதியில் அதிகாலை 4 மணி முதல் இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் மதியம் 12 மணி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதற்காக கடந்த 23ம் தேதி முதல் இன்று (திங்கட்கிழமை) வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழிபாட்டுக்கு (வைகுண்ட துவார தரிசனம்) பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கான இலவச தரிசன டோக்கன் விநியோகம் கடந்த 22ம் தேதி மதியம் தொடங்கி 25ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு முடிவடைந்தது. அதன்பிறகு இன்று வரை பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், திருப்பதியில் உள்ள கவுன்டர்களில் இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் (டைம் ஸ்லாட் டோக்கன்கள்) விநியோகம் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மீண்டும் தொடங்கும். காலை 4 மணி முதல் இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் மதியம் 12 மணி முதல் கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுவர்.
அவ்வாறு கூறுகிறது.
Discussion about this post