WhatsApp Channel
மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படுகிறது. அந்த வரிசையில் நேற்றும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணியளவில், இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் குறைந்தபட்சம் 4.0 முதல் அதிகபட்சமாக 7.6 வரையிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாடா, டோயாமா, யமஹாடா உள்ளிட்ட மாகாணங்கள் குலுங்கின. இதேபோல், தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதுடன், விரிசல்களும் ஏற்பட்டன. சாலைகளும் தெருக்களும் இரண்டாகப் பிரிந்தன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 33,500க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post