WhatsApp Channel
ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டில் உள்ள இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமடா மாகாணங்களில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
3.2 முதல் 7.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உட்பட ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகளும் தெருக்களும் இரண்டாகப் பிரிந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.அதே நேரத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
Discussion about this post