WhatsApp Channel
தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்களின் இடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது. கோவை காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கட்டுமான அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்காக ஆய்வு மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதால், விசாரணை முடிந்த பிறகே, விசாரணை விவரம் வெளியிடப்படும் என, வருமான வரித்துறை புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post