WhatsApp Channel
வன்முறையைத் தூண்டியதாக லியோ குழு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நடிகர் விஜய் நடித்த லியோ என்ற படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
படத்தில் வன்முறை காட்சிகள், சட்ட விரோத செயல்கள், கார், இரு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்வது என அனைத்து குற்றங்களையும் காவல்துறையின் துணையோடு செய்ய முடியும். வன்முறையை தூண்டியதற்காக லியோ படக்குழுவினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கை இன்றைக்கு (வியாழக்கிழமை) நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Discussion about this post