WhatsApp Channel
ஹெலிகாப்டர் மூலம் கப்பலை விட்டு வெளியேறுமாறு கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பரப்பில் லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து களத்தில் இறங்கிய இந்திய கடற்படையினர் கப்பலில் சிக்கியவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்டனர். சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ்’ சென்னையின் கப்பல் நெருங்குகிறது
ஹெலிகாப்டர் மூலம் கப்பலை விட்டு வெளியேறுமாறு கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கடத்தப்பட்ட கப்பலுக்குள் இந்திய கடற்படை கமாண்டோக்கள் நுழைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கப்பலின் தளம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Discussion about this post