WhatsApp Channel
திருப்பூரில் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் சித்தமாரி பகுதியை சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (வயது 23), ரூபேஷ் குமார் (21). இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை மருதுரையன்வலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், டிச.,31ல், திருப்பூர் ரயில் நிலையத்திற்கு, ரூபேஷ்குமார் வந்தார்.அப்போது, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, வடமாநிலத்தில் இருந்து, ரயில் மூலம், திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கினார். எதிர்பாராதவிதமாக ரூபேஷ்குமாரை சந்தித்த சிறுமி, படிப்பறிவு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை தேடி தனியாக திருப்பூருக்கு வந்ததாக கூறியுள்ளார். இங்கே ஏதாவது வேலை கிடைக்குமா? தொழில் நிறுவனங்கள் எங்கு உள்ளன என்று கேட்டார்.
பின்னர் அந்த பெண்ணின் தேவையை பயன்படுத்தி ரூபேஷ் குமார் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தங்குமிட வசதி செய்து தருவதாக கூறி சிறுமியை அங்கிருந்து காங்கேயம் சிவன்மலை பகுதியில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டின் உரிமையாளரிடம் பேசிவிட்டு புது ஆட்கள் வந்திருக்கிறார்கள். இதனால் பக்கத்து வீட்டு சாவியை வாங்கி அந்த பெண்ணிடம் வேறு வீடு வாடகைக்கு தருவதாக கூறி கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 31ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடலாம் என்று கூறி அழைத்துள்ளனர்.
பின்னர் பையில் வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து வற்புறுத்தி குடிக்க வைத்தனர். ஆனால் சிறுமி மது அருந்த மறுத்ததால், மது கலந்த குளிர்பானத்தை ஊற்றியுள்ளனர். குளிர்பானம் என நினைத்து, சில நிமிடங்களில் சிறுமி மயங்கி விழுந்தார்.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரூபேஷ் குமாரும், நிதீஷ்குமாரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் அங்கு வந்தார். நிதிஷ்குமார், ரூபேஷ்குமார் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சிறுமி நடந்ததை வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் அளித்தார். புகாரின் பேரில் நிதிஷ்குமார் மற்றும் ரூபேஷ்குமார் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Discussion about this post