ஈரானுடன் போர் நிறுத்தம்: ட்ரம்ப் பரிந்துரைக்கு இஸ்ரேல் ஒப்புதல்

0

ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இலக்குகள் பூர்த்தியானதால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசனையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“ஈரான் எதிரான ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ நடவடிக்கையின் அனைத்து முக்கிய குறிக்கோள்களும் இஸ்ரேலால் முழுமையாக அடைந்துள்ளன. இத்தாக்குதலின் மூலம் ஈரானின் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை திறன் குறித்த அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம்.

ஈரான் வான்வெளியில் முழுமையான கட்டுப்பாட்டை பெற்றதை தவிர, ஈரான் அரசுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம். எங்கள் குறிக்கோள்கள் நிறைவேறியதை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் போர் நிறுத்த ஆலோசனையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதேவேளை, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால், இஸ்ரேல் அதற்கு கடுமையான பதிலை வழங்கும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அரசும் இந்நிலையில் ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஈரான் அரசு தொலைக்காட்சி, “போர் நிறுத்தம் இப்போது அமலாகியுள்ளது” என்று அறிவித்தது.

முன்னதாக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியதாவது:

“இஸ்ரேல் தான் முதலில் தாக்குதல் மேற்கொண்டது. இதுவரை எந்தவொரு போர்நிறுத்த உடன்படிக்கையும் எட்டப்படவில்லை. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதற்குப் பதிலடி தொடருவதை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமீபத்திய சமூக வலைத்தள பதிவில்,

“போர் நிறுத்தம் தற்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீற வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here