நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
செலாரியா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு தொழில்நுட்ப பணியாளர்களுடன் புறப்பட்டது. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டபோது, அது வெடித்துச் சிதறியது.
மேலும் விமானத்தில் தீ தொடர்ந்து எரிந்து வருவதால், தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானம் நொறுங்கியது.
விமான விபத்தில் உயிரிழந்த 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விமானி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.