துருக்கியில் கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்…

0

துருக்கியில் கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்

துருக்கியின் Eskişehir மாகாணம் Eskişehir என்ற இடத்தில் உள்ள தேநீர் கடை ஒன்றில் இன்று கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அந்த கடையில் வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது ஹெல்மெட் அணிந்து துப்பாக்கி ஏந்திய ஆயுதம் ஏந்திய வாலிபர் ஒருவர் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், தாக்குதல் நடத்திய அர்தா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபரிடம் இருந்து கோடாரியும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here