ஜாம்பியாவில் இடிந்து விழுந்த சுரங்கத்தில் சிக்கி, 8 பேர்கள் பலி

0

ஜாம்பியாவில் இடிந்து விழுந்த சுரங்கத்தில் சிக்கிய ஓட்டுநர், பலர் உள்ளே சிக்கியுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சாம்பியாவின் லுசாகா மாகாணத்தில் உள்ள சாங்வே மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கு கற்களை எடுத்துச் செல்லும் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பணியை முடித்துக் கொண்டிருந்த போது, ​​திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கினர். போலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் ரே ஹமுங்காவின் கூற்றுப்படி, சுரங்கம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதில், ஓட்டுநர் ஒருவர் மீட்கப்பட்டார். அவர் இடிபாடுகளில் இருந்து ஓரளவு மீட்கப்பட்டதாகவும், பலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கூறினார். மேலும் அவர்களை மீட்குமாறு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீட்பு குழுவினர் 8 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

அப்பகுதியில் சவாலான சூழல் காணப்பட்டது. இதனால் நேற்று மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மீட்பு பணியும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது என்றார். மீட்பு பணி இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here