WhatsApp Channel
அடுத்த வாரம் 5000 புதிய குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். பின்னர் பெண்கள் தலைமைக்கான சி.ஐ.ஐ. இராணி மையத்தை திறந்து வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய அவர், “பெண்கள் வேலைக்காக வீட்டையும், சொந்த ஊரையும் விட்டு வெளியேற பொருளாதார அர்த்தமுள்ள போட்டி வாய்ப்புகளை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். தொழில்துறை தலைமைத்துவம் சட்டமன்ற முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த வாரத்திற்குள் நகர மையங்களில் 5,000 குழந்தை பராமரிப்பு மையங்களை அரசு தொடங்கும்” என்று கூறியுள்ளார்.
Discussion about this post