WhatsApp Channel
பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளார் மற்றும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்தனர்.
முன்னதாக உடல் நலக்குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி கேட்டு மேல்மருவத்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனிடையே, பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதன்படி பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Discussion about this post