WhatsApp Channel
குடும்ப அரசியல் குறித்து பிரியங்கா பேசுவது வேடிக்கையானது என்று சந்திரசேகர ராவ் மகள் கவிதா கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 30ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் நேற்று முளுகுவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “தெலுங்கானா மக்கள் சமூக நீதியைப் பெற வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால் முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
இந்நிலையில், சந்திரசேகர ராவின் மகளும், சட்டப் பேரவை உறுப்பினருமான கவிதா, நேற்று ஆர்மூரில் நடந்த படுகம்மா விழாவில் பங்கேற்றார்.
கண்ணாடி வீடு
பின்னர், பிரியங்காவின் விமர்சனம் குறித்து கவிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மோதிலால் நேருவின் கொள்ளுப் பேத்தி, ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேத்தி, இந்திரா காந்தியின் பேத்தி மற்றும் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா குடும்ப அரசியல் பற்றி பேசுகிறார்.
இதுவரை நடந்த பிரச்சாரத்தில் நான் கேட்ட வேடிக்கையான விஷயம் இதுதான். குடும்ப அரசியல் பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை.
அவர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி மாளிகையில் இருந்து கற்களை வீசக்கூடாது என்றார்.
Discussion about this post