WhatsApp Channel
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 762 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
ஒரு லட்சம் கோடி டாலர்களை ஏற்றுமதி செய்ய இந்தியா விரைவில் தயாராகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ முயற்சியைத் தொடங்கினார். இது மிகவும் துணிச்சலான நடவடிக்கை. இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வெற்றிகரமான ஏற்றுமதி வர்த்தகத்திற்கு இது போன்ற திட்டங்கள்தான் காரணம்.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 762 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர்களை ஏற்றுமதி செய்ய தயாராகும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
Discussion about this post