WhatsApp Channel
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வரும் 11ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகள் திறக்கும் முன், சுத்தப்படுத்துதல், மின் இணைப்பு உள்ளிட்டவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Discussion about this post