WhatsApp Channel
காஸாவில் அதிகரித்து வரும் யுத்தம் அங்குள்ள மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்குவதாக தன்னார்வ மற்றும் உதவி அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 2 மாதங்கள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போரில் இரு தரப்பிலும் சுமார் 18,000 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். காஸாவின் மொத்த மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்து தங்கள் சொந்த நிலத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும், போரின் விளைவாக, பல லட்சம் மக்கள் உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்துள்ளனர். 7 நாள் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தனது அசிங்கமான முகத்தை காட்டத் தொடங்கியது. முன்னெப்போதையும் விட வேகமாகவும் மூர்க்கமாகவும் காஸாவை இஸ்ரேல் தாக்குகிறது.
இஸ்ரேலின் தற்போதைய போர் தெற்கு காசாவைச் சுற்றியே உள்ளது. குறிப்பாக கான் யூனிஸ் நகரம் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ளது. இந்நிலையில், தீவிரமடைந்து வரும் போரினால் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி அமைப்புகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.
காசாவின் முக்கிய நகரங்களைச் சுற்றி கடுமையான நகர்ப்புறப் போர் மூண்டதால், பொதுமக்களைப் பாதுகாப்பது “முக்கியமானது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Discussion about this post