WhatsApp Channel
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 20 பேர் விரைவில் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து வந்தனர். இந்நிலையில், இலங்கை மன்னார் – கச்சத் தீவு அருகே மீனவர்கள் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பலரை கைது செய்தனர். இலங்கை அதிகாரிகள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கங்கேசன் கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு
உள்ளூர் போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 20 மீனவர்களையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட 20 மீனவர்களும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமர் மோடியின் முயற்சியால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இதனால் மோடிக்கு மீனவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post