“ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பது எந்த நம்பிக்கையின் அடிப்படையில்?” – தமிழிசை கேள்வி

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

“முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் இந்து மத பண்டிகைகளுக்கு ஒருபோதும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பை ஏற்றுக்கொண்டு உலக ஐயப்ப மாநாட்டில் பங்கேற்கிறார். இது எந்த நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். முதல்வரின் செயல்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளன.

இந்து மதத்தை ஆழமாக பின்பற்றுபவர் என்ற அடிப்படையில் விசிக தலைவர் வன்னியரசு ராமரைப்பற்றி பேசியதை கடுமையாக கண்டிக்கிறேன். சமூக நீதி, சமத்துவத்தை வலியுறுத்துவது கம்பராமாயணமும் ராமரும்தான்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததால் சாதிய கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதை தடுக்க ஏன் சிறப்பு சட்டம் கொண்டு வரப்படவில்லை?

மேலும், ‘தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சி.பி. ராதாகிருஷ்ணன் வருகிறார்’ என்று முதல்வர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாதுகாவலர்கள் எனச் சொல்வவர்கள், ஏன் ஒரு தமிழரை குடியரசுத் துணைத் தலைவராக ஆதரிக்க மறுக்கின்றனர்?” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Facebook Comments Box