வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் குறித்து முன்கூட்டியே எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத கேரள அரசு…. அமைச்சர் அமித் ஷா

0

வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு குறித்து முன்கூட்டியே எச்சரித்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப்படை, கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் கேரள எம்.பி. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வயநாடு பேரிடர் குறித்து மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

ஜூலை 23ஆம் தேதி கேரளாவுக்கு 9 பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும், மத்திய அரசின் பேரிடர் எச்சரிக்கைகளுக்கு மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் வேண்டாம்’ என்று கூறிய அமித் ஷா, ‘பேரிடர்களுக்கான முன் எச்சரிக்கை அமைப்பை உருவாக்க 2014-ம் ஆண்டு முதல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு செலவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here