WhatsApp Channel
சபரிமலையில் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனித்தனி வரிசையில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டதில் இருந்து தினமும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினமும் 1.25 லட்சம் பேர் தரிசனத்திற்கு வருவதால், 10 முதல் 14 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தனித்தனி வரிசையில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post