WhatsApp Channel
அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் பல்வேறு காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளை வழங்குகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பல்வேறு காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 1 லட்சம் லட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் 1 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு சாலை மார்க்கமாக அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post