WhatsApp Channel
முன்னதாக, மத்திய அரசு அலுவலகங்களுக்கு 22ம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து மீன் கடைகள், இறைச்சி கடைகள், இறைச்சிக் கூடங்கள் ஆகியவற்றை வரும் 22ம் தேதி மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 22ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post