WhatsApp Channel
மதுரம்மா கோவில் திருவிழா தேரோட்டத்தின் போது 120 அடி உயர தேர் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேகல் தாலுகா உஸ்கூரில் 1,000 ஆண்டுகள் பழமையான மதுரம்மா கோவில் உள்ளது. இக்கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இக்கோயிலில் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறும். இவ்விழாவின் போது ஊஸ்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தேர்கள் அலங்கரிக்கப்பட்டு அந்தந்த ஊர் தெய்வங்கள் மதுரம்மாவை தரிசனம் செய்ய இழுக்கப்படும். இதற்காக ஒவ்வொரு கிராம மக்களும் போட்டி போட்டுக்கொண்டு தேர் அமைத்து நூற்றுக்கணக்கான பக்தர்களை ஊஸ்கூருக்கு அழைத்துவருகின்றனர். ஒவ்வொரு தேரும் 20 ஜோடி காளைகள், 5 டிராக்டர்கள், 5 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பக்தர்கள் இழுக்கப்படுகிறது.
இதேபோல், உஸ்கூர் கிராமத்தில் மதுரம்மா கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் நேற்று நடந்தது. இதையடுத்து, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள், அலங்கரிக்கப்பட்ட 7 தேர்களை மதுரம்மா கோவிலுக்கு இழுத்தனர்.
150 காளைகள், 40 பொக்லைன் இயந்திரங்கள், 50 டிராக்டர்கள் மூலம் 7 தேர்கள் இழுக்கப்பட்டன. ஒவ்வொரு தேரும் சுமார் 120 அடி முதல் 130 அடி உயரம் கொண்டது.
இந்த நிலையில், உஸ்கூர் திருவிழாவுக்காக டிராக்டர்கள் மற்றும் காளைகள் மூலம் இழுத்துச் செல்லப்பட்ட 120 அடி உயர தேர், ஹைலைகே அருகே உள்ள கம்மசந்திரா பகுதியில் வளைவில் திரும்பியபோது, தேர் ஒரு பக்கமாக சரிய தொடங்கியது. பக்தர்கள் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர் இழுத்தனர்.
அப்போது திடீரென கண் இமைக்கும் நேரத்தில் தேர் சாய்ந்து கீழே விழுந்தது. தேர் முழுவதுமாக கீழே விழுந்ததால், அப்பகுதியில் இருந்து தூசி எழுந்தது. தேர் சாய்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், குழந்தைகள், போலீசார் என ஏராளமானோர் அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாரும் தேரின் அடியில் சிக்கவில்லை. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தேர் சாய்வதை பார்த்து அங்கிருந்து ஓடி வந்த சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
தேர் திருவிழாவை அங்கிருந்த பலர் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். அப்போது தேர் கீழே விழுவதை செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2018ல் பக்தர்கள் இழுத்த தேர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது மீண்டும் தேர் விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ | பெங்களூரு அருகே உள்ள ஆனேக்கல் நகரில் ஹுஸ்கூர் மதுரம்மா கோயிலின் வருடாந்திர தேர் திருவிழாவின் போது 120 அடி உயர கோயில் தேர் நேற்று காலை சரிந்து விழுந்தது. pic.twitter.com/iNtddDwAAU
— AthibAn Tv (@AthibanTv) April 7, 2024
Discussion about this post