WhatsApp Channel
2025ஆம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது, இதற்காக SpaceX நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரிய அரசாங்கங்கள் இராணுவ பதட்டங்களைக் குறைக்க 2018 இல் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இரு நாடுகளும் அதை காற்றில் விட்டன. இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீற நடவடிக்கை எடுத்தன.
வடகொரியா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவியது, தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வடகொரியாவுக்கு போட்டியாக ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்பவும் தென்கொரியா திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு தென்கொரியாவும் சோதனையில் பங்கேற்றது.
கடந்த ஆண்டு இறுதியில் தென்கொரியா, வடகொரியா ஆகிய இரு நாடுகளும் ராணுவ உளவு செயற்கைக்கோளை அனுப்பி சோதனை செய்தன. இதன்படி வடகொரியாவும், தென்கொரியாவும் தனித்தனியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக ராணுவ உளவு செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது.
இந்த ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும். அந்த நாடுகள் தங்கள் சொந்த ஏவுகணைத் தாக்கும் திறனையும் மேம்படுத்துவதாகக் கூறுகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 2வது ராணுவ உளவு செயற்கைகோளை தென்கொரியாவின் ஏவி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனை தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அதன்படி, உளவு செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்துள்ளது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த பிறகு, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டது.
இந்த செயற்கைக்கோள் சோதனையின் வெற்றி நமது ராணுவத்திற்கு கூடுதல் சுதந்திரமான கண்காணிப்பு திறனை அளித்துள்ளது என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியோன் ஹா கியூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எங்களது தாக்குதல் திறனும் மேலும் வலுப்பெற்றுள்ளது என்றார்.
2025ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது.இதற்காக SpaceX நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு, சொந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டைப் பயன்படுத்தி, ஏவி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் சோதித்து சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இதன்மூலம், இந்த சோதனையில் வெற்றி பெற்ற உலகின் 10வது நாடு தென் கொரியா.
இருப்பினும், வடகொரிய நிறுவனர் கிம் ஜாங்-உன் பிறந்த நாளான ஏப்ரல் 15-ம் தேதி வடகொரியா 2-வது உளவு செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் செலுத்தலாம் என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஷின் ஒன்சிக் இன்று தெரிவித்தார்.
Discussion about this post