WhatsApp Channel
தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு யூடியூபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சுமார் 5,000 யூடியூபர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது, ‘தேசத்தை உயர்த்துங்கள், இயக்கத்தை உருவாக்குங்கள்’ என்று அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இணைந்து செயல்பட்டால் லட்சக்கணக்கான மக்களுக்கு முக்கியமான விஷயங்களை எளிதில் கற்றுத்தர முடியும். “எனது சேனலில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருந்தாலும், தேர்வு மன அழுத்தம், எதிர்பார்ப்பு மேலாண்மை, உற்பத்தித்திறன் போன்ற தலைப்புகளில் யூடியூப் மூலம் மில்லியன் கணக்கான மாணவர்களிடம் பேசியது எனக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது,” என்றார்.
தூய்மைத் திட்டம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்ற தலைப்புகளில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, ‘யூடியூபர்’களின் கருத்துக்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
Discussion about this post