WhatsApp Channel
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 62 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகள் மீதான வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று இரு மாநிலங்களிலும் 62 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதன் மூலம் ஆந்திர மாநிலம் குண்டூர், விஜயவாடா, ராஜமுந்திரி மாவட்டங்களில் 53 இடங்களிலும், தெலுங்கானாவில் ஹைதராபாத், மெகாஹப் நகர் உள்ளிட்ட 9 பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவர் சந்திரா நரசிம்முலு கைது செய்யப்பட்டார். இந்த சோதனையில் ஆயுதங்கள், பணம் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த ரெய்டு நேற்று இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Discussion about this post