WhatsApp Channel
பிஆர்எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவ் தனது ஹாட்ரிக் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பிஆர்எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவ் ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறார். அதே சமயம் காங்கிரஸ், பாஜக கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளதால் தெலுங்கானாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் பிஆர் 58, காங்கிரஸ் 56, பாஜக 10 இடங்களைப் பெறலாம் என சிஎன் செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
தெலங்கானாவில் பிஆர்எஸ் 40-55 இடங்களையும், காங்கிரஸுக்கு 48-64 இடங்களையும், பாஜக 7-13 இடங்களையும் பெறலாம் என்று ஜன் கி பாத் செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் 49-59 இடங்களையும், பிஆர்எஸ் 48-58 இடங்களையும், பாஜக 5-10 இடங்களையும், மற்றவை 6-8 இடங்களையும் பெறலாம் என செய்தி நிறுவனமான TV9 தெரிவித்துள்ளது.
Discussion about this post