WhatsApp Channel
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு அக்டோபர் 9ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதன்படி 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. 80 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடன் மிசோரத்திலும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது. ஆனால் மிசோரமில், ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்ற பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து மிசோரமில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 13 மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எச்.லியான்செலா தெரிவித்தார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
Discussion about this post