WhatsApp Channel
சோரம் மக்கள் இயக்கம் மிசோரமில் மாபெரும் வெற்றி பெற்றது.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபை தேர்தல் கடந்த 7ம் தேதி நடந்தது. மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் அமைச்சராக ஜோரம்தங்கா பணியாற்றி வருகிறார். அதேசமயம், சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பா.ஜ.க ஆகியவை முக்கிய எதிர்க்கட்சிகளாக உள்ளன.
இந்நிலையில், மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சோரம் மக்கள் இயக்கக் கட்சியின் தலைவர் லால்துஹோமா பதவியேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
Discussion about this post