WhatsApp Channel
ஹமாஸ், பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அரசு ஏதாவது முடிவு எடுக்கப் போகிறதா? மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கான பதில், மத்திய அமைச்சரின் கவனத்துக்குச் செல்லாமல், அவரது பெயரைக் குறிப்பிடாமல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அரசு முடிவு எடுக்கப் போகிறதா? லோக்சபாவில் கண்ணூர் தொகுதி எம்.பி., சுதாகரன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியின் பெயர் குறிப்பிடப்பட்டு, இதற்கான பதிலை, லோக்சபா மற்றும் வெளியுறவு அமைச்சக இணையதளத்தில், நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டது. (டிசம்பர் 8).
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், குழப்பமான சூழல் நிலவியது. இதையடுத்து, ஹமாஸ் அமைப்பு தொடர்பான சர்ச்சை குறித்து இன்று (டிச.9) பதிலளித்த அமைச்சர் மீனாட்சி லேகி, “உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி மற்றும் அதற்கான பதில் அடங்கிய எந்த ஆவணத்திலும் நான் கையெழுத்திடவில்லை” என்று அவர் விளக்கினார்.
Discussion about this post