WhatsApp Channel
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது தற்போதைய விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள நிலையில், மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த ஆண்டு ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அதிபர் புதின், தற்போதைய அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டம் குறித்து பேசவும் வாய்ப்பளிப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த புதின், “ரஷ்யாவில் எங்கள் நண்பர் பிரதமர் மோடியை பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். பிரதமர் மோடியின் பயணத்தின் போது, அனைத்து தொடர்புடைய, தற்போதைய பிரச்சினைகள் குறித்தும், ரஷ்யா-இந்தியாவின் வாய்ப்புகள் குறித்தும் பேச முடியும். உறவுகள்.”
Discussion about this post