WhatsApp Channel
விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.15 மணியளவில் காலமானார். விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு தொண்டர்கள், ரசிகர்கள் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வருகின்றனர். இதனால் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு தலைமை அலுவலகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முன்னாள் முதல்வர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோரின் உடல்களை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து வரும் நிலையில், அதே வரிசையில் விஜயகாந்தின் உடலையும் அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு சில தன்னார்வலர்கள், அதிகமானவர்கள் அதிக இடத்தை எடுத்துக் கொள்வதில்லை. பத்துக்கு பத்து என்ற அளவில் இடம் கொடுத்தால் போதும் என்றும் கூறி வருகின்றனர்.
Discussion about this post