WhatsApp Channel
தென்னிந்தியாவில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ராமர் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னை – அயோத்தி இடையே தினசரி விமான சேவையை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைக்கிறார்.
அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், பாட்னா, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்படும்.
முன்னதாக, ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டது
Discussion about this post