WhatsApp Channel
பீகார் சட்டப் பேரவையின் சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் நந்த் கிஷோர் யாதவ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார். லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார்.
திடீரென கூட்டணியை உடைத்த நிதிஷ்குமார், பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார். தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
இந்நிலையில், பீகார் சட்டப் பேரவையின் சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் நந்த் கிஷோர் யாதவ் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பேசிய அவர், பேரவையை பாரபட்சமின்றி நடத்த முயற்சிப்பதாகவும், பேரவையின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதாகவும் கூறினார். நந்த் கிஷோர் யாதவ் பாட்னா சாஹிப் சட்டமன்றத் தொகுதியில் 7 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post