WhatsApp Channel
வெறும் ரூ.500க்கு கல் எறிந்த என்னையும், லட்சக்கணக்கான மக்களையும் காப்பாற்றிய பிரதமர் மோடியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது.மேலும் ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இருப்பினும் அங்கு இன்னும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதிகள் மட்டுமே மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில்தான் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பா.ஜ., சார்பில், ‘வளர்ந்த பாரதம், வளர்ந்த ஜம்மு காஷ்மீர்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பிரதமர் மோடி பேசினார். ரூ.6,400 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.
பள்ளியில் படிக்கும்போதே பணத்துக்காக கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், தற்போது பிரதமர் மோடியின் செயலால் அந்த நிலை மாறியுள்ளதாகவும் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இளைஞர் கூறியதாவது: நான் 10ம் வகுப்பு படிக்கும் போது கல் வீச்சில் ஈடுபட்டேன்.அப்போது எங்களுக்கு வேலை இல்லை. கல்லை எறிந்தால் ரூ.500 தருவார்கள். பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கும், தோட்டாக்களுக்கும் அஞ்சாமல் கல் வீசித் தாக்குதல் நடத்தினோம்.
எங்களை யாரும் திருத்தவில்லை. மேலும் எனக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தும் நான் அதனை பயன்படுத்தவில்லை. மோடி பிரதமராகும் வரை நான் வாக்களிக்கவில்லை. ஆனால் மோடி பிரதமரான பிறகு நிலைமை மாறிவிட்டது. நான் இரட்சிக்கப்பட்டேன். என்னைப் போன்ற கல் எறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதை நான் எல்லோருக்கும் சொல்கிறேன். மோடியை மீண்டும் வெற்றிபெறச் செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய
வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .
மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.
Discussion about this post