WhatsApp Channel
நல்ல அரசியலும், நல்ல பொருளாதாரமும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதை இந்தியா நிரூபித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசு உச்சி மாநாட்டில் ‘பாரத்: அடுத்த தசாப்தம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி,
வலுவான ஜனநாயக நாடாக இந்தியா உலகிற்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது என்றார். விக்சித் பாரதத்தின் கனவுகளை நிறைவேற்ற இந்த தசாப்தம் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த தசாப்தம் இந்தியாவின் அதிவேக இணைப்பு, அதிவேக இயக்கம் மற்றும் அதிவேக செழிப்பு ஆகியவற்றின் தசாப்தமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சியின் வேகத்தையும் அளவையும் அதிகரிப்பதில் தனது முழு கவனம் செலுத்துவதாக மோடி கூறினார். கடந்த பத்து வருடங்களில் மக்கள் கண்டது தீர்வுகளையே தவிர கோஷங்களை அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.
AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய
வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .
மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.
Discussion about this post