அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம், என்ஐஏ அதிகாரிகள் தினமும் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி தஹாவூர் ராணா, கடந்த 9 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
. பயங்கரவாதி தஹாவூர் ராணா விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், அவர் சார்பாக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வரும் பல்வேறு முக்கிய தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Facebook Comments Box