குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறுபிள்ளை போல் செயல்படுகிறார் என்று விமர்சித்தார்.
இது குறித்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி அழுது புலம்பி அனுதாபம் தேட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள ராகுல் காந்தி, பிற்படுத்தப்பட்ட மக்களை திருடர்கள் என்று அழைத்த வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
கூட்டணி கட்சிகளை நம்பி அரசியல் செய்யும் காங்கிரசை ஒட்டுண்ணி என்றும், கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் அழிக்கும் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
Discussion about this post