திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைப் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரையுடன் காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து தனது உரையைத் தொடங்கினார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு தலா 12 மாதங்களுக்கு 500 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் என அறிவித்தார். நிர்மலா சீதாராமன் கூறுகையில், வேலைவாய்ப்பு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதம் 5,000 ரூபாயும், 6,000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.