ஏர் இந்தியாவின் ஆபரேட்டரான டாடா, ஆகஸ்ட் 8 வரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியாவை நிர்வகித்து வரும் டாடா நிறுவனம், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து இந்தியாவுக்கான ஏர் இந்தியா விமான சேவையை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.