காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயம்

0

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததும் ராணுவத்தின் சிறப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here