கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் – ஊழல் குற்றச்சாட்டில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் கைது!

0

கொல்கத்தா பெண் பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டார் ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மாநிலத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து மருத்துவர்கள் தங்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த 25ம் தேதி கொல்கத்தா பெலிகாட்ரா குடியிருப்பு பகுதியில் உள்ள சந்தீப் கோஷின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மருத்துவமனையில் பணமோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here